/* */

குமாரபாளையம் உணவகத்தில் தீ விபத்து - பரபரப்பு

குமாரபாளையத்தில் இன்று உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.

HIGHLIGHTS

குமாரபாளையம் உணவகத்தில் தீ விபத்து - பரபரப்பு
X

உணவகத்தின் உள்ளே பற்றி எரியும் நெருப்பை,அணைக்கும் முயற்சியில்,குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காலனி பஸ் நிறுத்தம் அருகில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் புவனேஸ்வரன், 25. காலை இந்த கடையில் இருந்து புகை வந்தது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தந்தனர்.

இதுகுறித்து, குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் வந்து, ஷட்டர் கதவை உடைத்து உள்ளே சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில், டி.வி., யூ.பி.எஸ். உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின.

தீயில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு 50 ஆயிரம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 21 Jun 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் திட்டங்கள், செயல்பாடுகள் : சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடி...
  2. காஞ்சிபுரம்
    பெட்ரோல் கேனுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி நின்று தற்கொலை...
  3. ஈரோடு
    ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது
  4. திருவள்ளூர்
    திருவள்ளூரில் போக்குவரத்திற்கு இடையூறான பேனர்கள்: அப்புறப்படுத்த...
  5. ஆரணி
    ஆரணி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய மாணவர்கள்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு...
  7. திருவண்ணாமலை
    சென்னை பீச்- திருவண்ணாமலை இடையே இயங்கும் ரயிலின் பயண நேரம் குறைக்க...
  8. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  9. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  10. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்