/* */

தனியார் நூற்பாலையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

பள்ளிபாளையம் அருகே மின் கசிவு காரணமாக தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

தனியார் நூற்பாலையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
X

 நூற்பாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே யோகராஜ் மற்றும் சசி ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து 7வருடங்களாக நூற்பாலை நடத்தி வருகின்றனர்.

நூற்பாலையில் இன்று விடுமுறை காரணமாக பணியாளர்கள் யாரும் வரவில்லை. இந்நிலையில் காலை நூற்பாலையில் இருந்து புகை வருவதை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் நூற்பாலையில் இருந்த இயந்திரம் மற்றும் கோண் மூட்டைகள் என ரூ.5லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்