Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் மகன் கண்ணெதிரே கார் மோதி தந்தை பரிதாப உயிரிழப்பு
குமாரபாளையத்தில் மகன் கண்ணெதிரே தந்தை கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஒசுவக்காடு பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை, 50. அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இரவு நேர வாட்ச்மேனாக பணியாற்று வந்தார். நேற்று காலை 06:00 மணியளவில் பங்க் எதிரே வேலை முடிந்து சாலையை கடந்தார்.
அப்போது வேகமாக வந்த டவேரா கார் இவர் மீது மோத படுகாயமடைந்தார். சாலையின் மறுபக்கம் இவரது மகன் சுரேஷ், 30, இவருக்காக காத்திருந்த நிலையில் இச்சம்பவம் மகன் கண்ணெதிரே நடந்தது. அண்ணாதுரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் சேலத்தை சேர்ந்த டாக்டர் மணிகண்டபிரபுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.