உழவர் திருநாள் கொண்டாடிய விவசாயிகள்

உழவர் திருநாள் கொண்டாடிய விவசாயிகள்
X

பசுவின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்திய விவசாயி.

குமாரபாளையம் பகுதியில் பசுவை அழகுபடுத்தி உழவர் திருநாளை விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடினர்.

குமாரபாளையம் சுற்றுப்புற பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளன. பொங்கல் திருவிழாவின் ஒரு கட்டமாக உழவர் திருநாள் மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைந்த நெல், காய்கறிகள், இளநீர், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவைகள் வாழை இலையில் படைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தங்கள் பணிக்கு உதவும் மாடுகள், ஆடுகள், எருமைகள் ஆகியவைகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்தனர். புது பானையில் பொங்கலிட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல், கரும்பு ஆகியவைகளை கொடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture