/* */

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு
X

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நேசமுடன் உற்சாக வரவேற்பு அளித்த வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி மற்றும் ஆசிரியர்கள்.

கடந்த 600 நாட்களுக்கு பின்பு பள்ளிகள் திறக்கவும், மாணவர்களை உற்சாகமாக வரவேற்கவும் தமிழக அரசு உத்திரவிட்டது. அ

தன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளியின் முன்பு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டும், வழிநெடுக விரிப்புகள் விரிக்கப்பட்டும், பள்ளி வளாகம் முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி, பள்ளி தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகிக்க முதலாம் வகுப்பு பயில வரும் மாணவ, மாணவியர்க்கு மாலைகள் மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டு நேசமுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. வரவேற்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரவி, வெங்கடாசலம், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 1 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...