/* */

கொட்டி வைத்த குப்பையால் அரசு பஸ் மோதி பொறியாளர் உயிரிழப்பு

குமாரபாளையத்தில் கொட்டி வைத்த குப்பையால் அரசு பஸ் மோதி பொறியாளர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கொட்டி வைத்த குப்பையால் அரசு பஸ் மோதி பொறியாளர் உயிரிழப்பு
X

பொறியாளரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் குமாரசாமி, 50. தனியார் நிறுவன பொறியாளர். இவர் நேற்று பகல் 11:30 மணியளவில் மஞ்சுபாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு செய்ய தனது டி.வி.எஸ். ஸ்போர்ட்ஸ் வாகனத்தில் குமாரபாளையம் சேலம் சாலை பவர்ஹவுஸ் அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, நாய்கள் குறுக்கே ஓடி வந்ததால் நிலை தடுமாறியதில் கீழே விழுந்தார். இவரது அருகே வந்து கொண்டிருந்த எஸ்.2 எனும் சங்ககிரி செல்லும் அரசு டவுன் பஸ் பின் சக்கரம் இவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பஸ் ஓட்டுநர் சங்ககிரியை சேர்ந்த சந்திரன், 59, என்பவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் பவர் ஹவுஸ் அருகே குப்பைகள் மலை போல் கொட்டி வைக்கபட்டுள்ளது. இங்கு சாப்பிட கிடைக்கும் என கூட்டம் கூட்டமாக நாய்கள் வருகின்றன. இப்படி வந்த நாய்களுக்கு சண்டை ஏற்பட்டு சாலையில் வர, இதனால் நிலைதடுமாறி இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையின் ஒரு புறம் குடியிருக்கும் குப்பாண்டபாளையம் ஊராட்சி குடியிருப்பு வாசிகள், சாலையின் மறுபுறம் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனால் பறவைகளும் மின் கம்பியில் அமர்வதால் மின் இணைப்பு துண்டிப்பு சம்பங்களும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் சாலையில் இருபுறமும் நடைபாதைக்காக போடப்பட்ட பேவர் பிளாக் தரைத் தளம் முழுவதும் ஆட்டோ பைனான்ஸ் உள்ளிட்ட பல தொழில் நிறுவனத்தார் 2 கி.மீ. தூரம் ஆக்கிரமிப்பு செய்ததால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பஸ், லாரி வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலையும் பல விபத்திற்கு காரணமாக அமைகின்றன.

இது குறித்து குப்பை கொட்டாமல் இருக்கவும், சாலை ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...