எல்லை மாரியம்மன் கோவிலில் பாலாய பாலஸ்தாபன விழா
குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பாலாய பாலஸ்தாபன விழா
குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் பாலாய பாலஸ்தாபன விழா நடைபெற்றது.
குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனதையொட்டி, நேற்று மாலை 04:00 மணியளவில் பாலாய பாலஸ்தாபன விழா விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதையடுத்து புண்யாக வாசனம், பஞ்ச கவ்யம், வாஸ்து சாந்தி, பூர்ணா ஹூதியும், இதையடுத்து நேற்று இரவு 08:30 மணிக்கு மகா கணபதி, கல்யாண விநாயகர், செந்தூர் முருகன், பரிவார மூர்த்திகள், எல்லை மாரியம்மன் சுவாமிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை சுவாமிநாத சிவாச்சாரியார், வேத சங்கர சத்யோஜத சிவாச்சாரியார் குழுவினர் செய்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu