/* */

நாட்டுப்புறக் கலைகள் மூலம் சுயேச்சை வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு

குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா நாட்டு புற கலைகள் மூலமாக வாக்குறுதிகளை பாடலாக்கி வாக்கு சேகரித்தார். #

HIGHLIGHTS

நாட்டுப்புறக் கலைகள் மூலம்    சுயேச்சை வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு
X

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஓம் சரவணாவுக்கு வைரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்த சின்னத்தை வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் வீடு,வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறார். குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் வீடு வீடாக மக்களை சந்தித்து தனது சின்னமான வைரம் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்கிறார்.

அவர் தொகுதிக்கு செய்யவேண்டிய வாக்குறுதிகளை விளக்குகிறார். இதற்கிடையே நாட்டுப்புற கலைகளின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் வகையிலும், எளிய முறையில் வாக்காளர்களை கவரும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் பாடல்கள் பாடி வாக்காளர்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

நாட்டுப்புறப் பாடலின் வாயிலாக தொகுதியில் வெற்றி பெற்றால், தொகுதி வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. இதுவரை அவர் செய்த நல்ல காரியங்கள்,செய்த சமூக சேவைகள் நாட்டுப்புற பாடலாக உருவாக்கப்பட்டு பாடப்படுகிறது. இந்த நூதன பிரசாரம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Updated On: 28 March 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது