/* */

கார் மோதி முதியவர் பலி: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கார் மோதி முதியவர் பலி: போலீசார் விசாரணை
X
பைல் படம்.

கடந்த டிச. 23 இரவு 07:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சாலையை கடந்தார். அப்போது பவானியிலிருந்து சேலம் நோக்கி சென்ற ஈகோ கார் முதியவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க அழைத்து சென்ற போது, வழியில் இறந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் அடிபட்ட முதியவர் பெயர் பழனிசாமி, 70, என்பது மட்டும் தெரிய வந்தது. விலாசம் தெரியவில்லை. கார் ஓட்டுனர் சின்ன கோட்ட பாளையம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பாபு, 41, என்பது தெரிய வந்தது. பாபுவிற்கும் அடிபட்டதால் குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார், வி.ஏ.ஒ. முருகன் புகாரின் படி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 29 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்