/* */

பழுதான மின் கம்பங்கள் - மின்வாரிய உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

குமாரபாளையத்தில், பழுதான மின் கம்பங்களை, மின்வாரிய உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பழுதான மின் கம்பங்கள் - மின்வாரிய உதவி இயக்குனர் நேரில் ஆய்வு
X

குமாரபாளையம் பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில், உடையார்பேட்டை, கலைமகள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பழுதான மின் கம்பங்களை புதிய மின் கம்பங்களாக மாற்றி தர வேண்டியும், வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை இடம் மாற்றி அமைக்கவும் வேண்டி, மின்வாரிய உதவி இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. ம.நீ.ம. நகர செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா உள்ளிட்டோர் மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம், இதற்கான மனு கொடுத்தனர்.

இந்த மனு மீதான விசாரணைக்காக, மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசன் மனுவில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது, மகளிரணி நிர்வாகிகள் மின் கம்பம் சேதம் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ள மூன்று கம்பங்களை விரைவில் புதிய மின் கம்பங்களாக மாற்றிடவும், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின் கம்பத்தை இடம் மாற்றி அமைக்கவும் உறுதியளித்தார்.

Updated On: 30 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  2. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  5. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  6. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  7. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்