/* */

குமாரபாளையம் அரசு பள்ளியில் என்.சி.சி. சார்பில் ஓவியப்போட்டி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பள்ளியில் என்.சி.சி. சார்பில்   ஓவியப்போட்டி
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி சார்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் நிறுவனர் விடியல் பிரகாஷ், டாக்டர் செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார்கள்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் அமைதி மற்றும் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார்.

ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் அணில் வர்மா வழிகாட்டுதல்படி, சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் உலக நாடுகளுக்கிடையே இந்தியா அமைதியையும், ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது என்பதை குறிப்பிடும் வகையில் என்.சி.சி. மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அபெக்ஸ் சங்க தலைவரும், விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் நிறுவனருமான விடியல் பிரகாஷ், டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்கள். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 22 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது