/* */

குமாரபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை... பொதுமக்களுக்கு நிம்மதி இல்லை!

குமாரபாளையத்தில், தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாலுக்கா அலுவலகம் பின்புறம் மேற்கு காலனி பகுதியில், அதிகம் குடியிருப்பு பகுதியில், நாய்கள் கூட்டமாக திரிகின்றன.

இதனால் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி வரும் பொதுமக்கள், நடந்து செல்வோரை, தெரு நாய்கள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு துரத்துகின்றன. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, தனியே வரும் குழந்தைகளுக்கு, இந்த நாய்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 13 Jun 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை