/* */

குமாரபாளையம் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, குமாரபாளையம் பகுதி அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு அலுவலகங்களில்  கிருமிநாசினி தெளிப்பு
X

குமாரபாளையம் காவல் நிலையத்தில் கிருமி நாசினி புகை மருந்து அடிக்கப்பட்டது. 

கொரோனா மூன்றாம் அலை பரவல், ஒமைக்ரான் நோய் தொற்று, தமிழகத்தில் பரவுவதாக வெளியாகும் தகவல் மக்களை கவலை அடையச் செய்துள்ளது. இதனிடையே, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மருந்து பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், தாலுக்கா அலுவலக நிர்வாகம், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட பல பொதுநல அமைப்பினரும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு அலுவலர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் அவசியம் என்று, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, தாலுக்கா அலுவலகம், நூலகம், ஆர்.ஐ. அலுவலகம், வி.ஏ.ஒ. அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி புகை அடிக்கப்பட்டது.

Updated On: 5 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்