/* */

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நகர துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நகர துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

சேந்தமங்கலம் காவல்துறை விசாரணையில் தலித் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்திற்கு காரணமான, காவல் ஆய்வாளர், உதவி கண்காணிப்பாளர்களை வழக்கில் சேர்க்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி.வன் கொடுமை, கொலை குற்ற பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்க மாவட்ட அமைப்பாளர் முருகேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி, சி.பி.எம். நகர செயலர் சக்திவேல், நகர குழு உறுப்பினர் சரவணன், நகர துணை செயலர் மோகன், நகர கிளை செயலர்கள் ஆனந்தகுமார், சண்முகம், அர்சுணன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 21 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...