/* */

குமாரபாளையம் மக்கள் குறை தீர்வு முகாமில் குறைந்து வரும் மனுக்கள்

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு முகாமில் மனுக்களின் எண்ணிக்கை வாராவாரம் குறைந்து வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் மக்கள் குறை தீர்வு முகாமில் குறைந்து வரும் மனுக்கள்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் பிரதி திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் நேரில் சென்று மனுக்கள் வழங்காமல் ஆன்லைன் மூலம் மனுக்கள் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களை வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு மனுக்கள் வழங்கப்படும்போது, மாவட்ட கலெக்டர் ஆன்லைன் மூலம் கணினி திரையில் தோன்றி மனு கொடுத்த நபரிடம் மனு சம்பந்தமான விபரம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனுக்கள் தரலாம் என்ற தகவல் பொதுமக்களை சரியாக இதுவரை சென்றடையவில்லை. இதனால் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்களின் மனுக்கள் குறைந்து வருகிறது.

ஆகவே, இது பற்றி போதிய விழிப்புணர்வை ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்து பொதுமக்கள் பலரும் பயன் பெற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 23 Aug 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்