மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஒரு நாளாக மாற்ற முடிவு

மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஒரு நாளாக மாற்ற முடிவு
X

பைல் படம்

மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஒரு நாளாக மாற்றம் செய்யப்பட்டது

அரசு வழக்கறிஞர் அத்துமீறலை கண்டித்து குமாரபாளையம் நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் 3 நாட்கள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். அதன் முதல் நாள் பணிகள் புறக்கணிப்பு நடந்தது.

இந்நிலையில் குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது: அரசு பெண் வழக்கறிஞர் பணியிட மாறுதலில் செல்வதாலும், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படுவதாலும், பொதுமக்களும் அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஒரு நாள் புறக்கணிப்பாக மாற்றம் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture