/* */

குமாரபாளையம் அருகே சேதமடைந்த பாலம்; சீரமைக்கப்படாத அவலம்

குமாரபாளையம் அருகே, சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சேதமடைந்த பாலம்; சீரமைக்கப்படாத அவலம்
X

சேதமடைந்துள்ள, வீரப்பம்பாளையம் பகுதி வாய்க்கால் பாலம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் வாய்க்கால் பாலம் உள்ளது. இது, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தற்போது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த பாலமானது, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கிறது; அதிக போக்குவரத்து மிகுந்ததாகவும் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என பல தரப்பட்டவர்கள், இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பழுதாகியுள்ள இப்பாலம் உடைந்தால், பல கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது. உடனடியாக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க