/* */

பள்ளிபாளையம் அம்மா உணவகத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

பள்ளிபாளையம் அம்மா உணவகத்தில் குவிந்த மக்கள் கூட்டம்
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனையொட்டி குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி அம்மா உணவகத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை காலை மதியம் வேலைகளில் உணவு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி நகராட்சியில் உணவு செலவுக்காக 2 லட்ச ரூபாய் நிதி அளித்திருந்தார். இந்நிலையில இன்று மதியம் பள்ளிபாளையம் புதன் சந்தை அம்மா உணவகத்தில் இலவச உணவினை பெற ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளிபாளையம் காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி உணவு வாங்கிச் செல்ல வழி ஏற்படுத்தினர். கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக விசைத்தறி தொழில் இயங்காததால் வறுமையில் வாடும் ஒரு பிரிவு தொழிலாளர்களும் இந்த உணவகத்தில் உணவு பெற வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Updated On: 21 May 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  6. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  7. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  8. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  9. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  10. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்