/* */

குமாரபாளையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி காங்கிரசார் பாத யாத்திரை

சுதந்திரதின விழாவையொட்டி குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி காங்கிரசார் பாத யாத்திரை
X

குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது.

75வது சுதந்திரதின விழாவையொட்டி தேச விடுதலைக்கு பாடுபட்டு உயிர்நீத்த தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் சத்தியாக்கிரக பாத யாத்திரை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் யாத்திரை புறப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஆதிகேசவன், மகளிர் அணி நிர்வாகி மல்லிகா, நிர்வாகிகள் சாமிநாதன், தங்கராஜ், சிவகுமார், கோகுல்நாத், மனோகரன், ரவிச்சந்திரன், நக்கீரன், பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த யாத்திரை கட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

Updated On: 14 Aug 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது