/* */

திருவிழா விடுமுறை விடாததால் குழப்பம்: பள்ளி மாணவர்கள் தவிப்பு

குமாரபாளையத்தில் உள்ளூர் திருவிழா விடுமுறை விடாததால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவிழா விடுமுறை விடாததால் குழப்பம்: பள்ளி மாணவர்கள் தவிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவிற்கு பூ மிதித்தல், தேர்த்திருவிழா நடைபெறும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் விடுமுறை விடப்படுவது வழக்கம். குமாரபாளையம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் புதன்கிழமை மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்கள் என்பதால், அடுத்து வரும் சனிக்கிழமை நாளில் விடுமுறை விடப்பட்ட நாளுக்கு உண்டான வகுப்பு நடத்த அனுமதி கேட்டு விடுமுறை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கொரோனா விடுமுறைக்கு பின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி 6 நாட்கள் வேலை நாட்கள் என்பதால், எந்த நாளில் அதனை சமன் செய்வது என்பது தெரியாமல் விடுமுறை விடப்படாமல் உள்ளதாக மாணவர்கள் சிலர் கூறினர்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள மொபைலில் முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. பள்ளி துணை ஆய்வாளரிடம் கேட்ட போது, இதனை மாவட்ட கல்வி அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனால் இந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருகின்றனர். திருவிழா சமயத்தில் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வராத நிலையில் நாங்கள் மட்டும் சென்று என்ன செய்வது என ஆசிரியர்களும் புரியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

Updated On: 8 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்