/* */

கேஸ் விலை உயர்வு: கம்யூனிஸ்ட் சார்பில் குமாரபாளையத்தில் சைக்கிள் பேரணி

பெட்ரோல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், குமாரபாளையத்தில் இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

கேஸ் விலை உயர்வு: கம்யூனிஸ்ட் சார்பில் குமாரபாளையத்தில் சைக்கிள் பேரணி
X

குமாரபாளையத்தில், சிபிஐ சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, நகர செயலர் கேசவன் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு நிர்வாகி மணிவேல், சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் துவங்கிய பேரணி, சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பெராந்தர் காடு, காவேரி நகர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, நடராஜா நகர், சுந்தரம் நகர், கிழக்கு மற்றும் மேற்கு காலனி, அம்மன் நகர், நாராயண நகர், தம்மண்ணன் வீதி, உள்ளிட்ட பல வீதிகளின் வழியாக வந்து பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நிறைவு பெற்றது.

பேரணியில் பங்கேற்றவர்கள், கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்களை முழங்கியவாரே சென்றனர். பள்ளிபாளையம் பிரிவில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தை, முன்னாள் நகர செயலர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் வக்கீல் கார்த்திகேயன், ஏ.ஐ.ஒய். எப். நகர செயலர் கணேஷ்குமார் ஏகானந்தம் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Updated On: 30 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்