குமாரபாளயைத்தில் நகர திமுக செயற்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

குமராபாளையம் நகர திமுக அலுவலகத்தில் நகர செயற்குழு மற்றும் வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமராபாளையம் நகர திமுக அலுவலகத்தில் நகர செயற்குழு மற்றும் வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ராமசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நகர பொறுப்பாளர் செல்வம் மூன்று தீர்மானத்தை அறிவித்தார்.
இதில் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா குழந்தைகளுக்கு நோட்டு வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் 33வதுவார்டிலும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நகராட்சி உள்ளாட்சியின் புதிய வார்டுபடி இதில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்படவேண்டும். புதிய திமுக உறுப்பினர் சேர்க்கை சேர்க்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் நகர செயலாளர்கள் ஜெயபிரகஷ், வெங்கடேசன், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள், நகர இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, வார்டுசெயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu