/* */

பள்ளிபாளையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

பள்ளிபாளையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
X

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சௌடேஸ்வரி பேசினார்.

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சௌடேஸ்வரி பேசுகையில், இந்த பகுதியில் குழந்தை திருமணம், இள வயது கருவுருதல், அதிகம் நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளை காத்திட மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இதுவரை 4 கோடியே 85 லட்சம் நிதி வழங்கபட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 69 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுதும் 713 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரதமர் பி.எம்.கேர் திட்டத்தின் மூலம் 38 லட்சம் ரூபாய் குழந்தைகளுக்கு வழங்கபட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நகராட்சி கமிஷனர் கோபிநாத் பேசுகையில், குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்கள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை சேர்மன் பாலமுருகன், கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 29 April 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்