குமாரபாளையம் மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்த சேர்மன்

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் சேர்மன் விஜய்கண்ணன் குறைகளை கேட்டறிந்தார்.
குமாரபாளையத்தில் தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வியாபாரிகளிடம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் குறைகளை கேட்டறிந்தார்.
இவருடன் கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், தர்மராஜ், சியாமளா, தீபா, கனகலட்சுமி, விஜயா, ரேவதி, சுமதி, நந்தினிதேவி நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu