/* */

குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு

குமாரபாளையத்தில், கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு பெண்களிடம் 10 பவுன் நகை பறித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
X

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில், ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷகம் நேற்று நடைபெற்றது. இதில் நகரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில், மர்ம நபர்கள், இரு பெண்களின் நகைகளை திருடி சென்றனர். இது பற்றி குமாரபாளையம் போலீசில், திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொன்னம்மாள், 58, வாசுகி நகரை சேர்ந்த காளியம்மாள், 61,புகார் அளித்தனர். கூலித்தொழிலாளி பொன்னம்மாளின் ஐந்தரை பவுன் தாலிக்கொடியும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை காளியம்மாளின் ஐந்து பவுன் தங்க செயின் பறிபோனதும் தெரியவந்துள்ளது. குமாரபாளையம் போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் ஆய்வு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!