/* */

பள்ளிபாளையம் பாலத்தில் வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தம்

நாமக்கல் மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் பாலத்தில், வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் பாலத்தில் வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தம்
X

பள்ளிப்பாளையம் புது பாலத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

நாமக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரையோரம், பழைய பாலம், மற்றும் புதுப்பாலம் உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, ஈரோடு மாவட்ட காவல் துறையினரும், நாமக்கல் மாவட்ட காவல் துறையினரும், இரு மாவட்ட எல்லைகளிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட எல்லைக்குள் வரும் வெளிமாநில மாவட்ட வாகனங்களை கண்காணிக்கும் பொருட்டு, பள்ளிபாளையம் புதுபாலத்தில் இரண்டு சிசிடிவி கேமராக்களும், பழைய பாலத்தில் ஒரு சிசிடிவி கேமராக்கள் என மொத்தமாக மூன்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணித்து, பாதுகாப்பு, குற்றச்செயல்கள் மற்றும் விபத்து உள்ளிட்ட நிகழ்வின்போது உடனடி தீர்வு காணும் வகையில் இந்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருவதாக, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளிலும்,முக்கிய பகுதிகளிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Jun 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.