/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய பத்திரிக்கையாளர்கள்

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று இரவு பிரியாணி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உணவு வழங்கிய பத்திரிக்கையாளர்கள்
X

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று இரவு பிரியாணி வழங்கும் நிகழ்வை இன்ஸ்பெக்டர் ரவி, பா.ஜ.க. நிர்வாகி சரவணராஜன் துவக்கி வைத்தனர்.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று இரவு பிரியாணி வழங்கப்பட்டது.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் தெரு இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காவிரி நீர் புகுந்தது. இங்கு குடியிருந்த நபர்கள் புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று இரவு பத்திரிக்கையாளர்கள் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ரவி, பா.ஜ.க. அரசியல் தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சரவணராஜன் பங்கேற்று உணவு வழங்கி துவக்கி வைத்தனர். ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன்,செந்தில்குமார், வி.ஏ.ஒ. அலுவலக உதவியாளர்கள் காமராஜ், ரகு, பத்திரிக்கையாளர்கள் பாண்டியன், செந்தில், நந்தகுமார், யவன சோழன், மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



Updated On: 3 Aug 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு