பள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்பனை: ஒருவர் கைது; போலீசார் அதிரடி

பள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்பனை: ஒருவர் கைது; போலீசார் அதிரடி
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

பள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளயைம் அடுத்த பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேரில் சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நபரை கையும், களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் கார்த்திக்குமார், 35, என்பதும், திருச்செங்கோடு அருகே தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai marketing future