/* */

விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கோழிக்கடை வாடிக்கையாளர்கள்

குமாரபாளையத்தில் விபத்தில் இறந்த தொழிலாளியின் உடலை, கோழிக்கடை வாடிக்கையாளர்கள் அடக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கோழிக்கடை வாடிக்கையாளர்கள்
X

 குமாரபாளையத்தில், விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கோழிக்கடை வாடிக்கையாளர்கள்.

குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர், ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், 25. இவர் கடந்த 6 மாதம் முன்புதான், இந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார்.

கடந்த செப். 27ல் வட்டமலை தனியார் கல்லூரி எதிரில், சேலம் கோவை புறவழிச் சாலையை நடந்து கடந்துள்ளார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.

இவரது உடல், குமாரபாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இவரது உறவினர்கள் யாரும் வராததால், கோழிக்கடை வாடிக்கையளர்களான மாணிக்கம், சுரேஷ், குப்புராஜ், தேவராஜ், யுவராஜ், தேவா, கோழிக்கடையினர் பிரபு, பூமணி உள்ளிட்ட பலர், ஸ்ரீகாந்தின் உடலை குமாரபாளையம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இவர்களது செயலை, பலரும் பாராட்டினர்.

Updated On: 4 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  2. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  3. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  5. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  6. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...