/* */

குமாரபாளையம் இன்னர்வீல் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா

ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம்  இன்னர்வீல் சங்கம் சார்பில்   தாய்ப்பால் வார விழா
X

குமாரபாளையம் இன்னர்வீல் சங்கம் சார்பில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில் முன்னாள் பி.எம்.ஒ., டாக்டர் செந்தாமரை பேசினார்.

குமாரபாளையம் ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி கவிதா தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் பி.எம்.ஒ.வும், கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தாமரை பங்கேற்று, குழந்தைகளுக்கு தாய்பால் அவசியம் குறித்தும், தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ ஆலோசனைகளையும் கூறினார்.

பின்னர், குழந்தைகளை பாதுகாக்க தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை 25 நபர்களுக்கு வழங்கினார். 500 க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வரும் சரவணன், 27, கோபால், 24, இருவரும் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், ரோட்டரி, இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Updated On: 4 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்