ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுவன் படுகாயம்: ஆட்டோ ஓட்டுநர் கைது

ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுவன் படுகாயம்: ஆட்டோ ஓட்டுநர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் ஷேர் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் படுகாயமடைந்ததால் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் அருகே சடையம்பாளையத்தில் வசிப்பவர் சுரேஷ்குமார், 33, தறி கூலி. இவரது மகன் விபிஷ், 6. மே 8ம் தேதி பகல் 12:30 மணியளவில் வினோபாஜி நகர் சாலையின் குறுக்கே சிறுவன் விபிஷ் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தான்.

இதனையடுத்து சிறுவனை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இதுகுறித்து சிறுவனின் தந்தை குமாரபாளையம் போலீசில் புகார் தர, ஆட்டோ ஓட்டுநர் அசோக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
how ai is used in education