/* */

காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிரந்தர வீடு வழங்க பா.ஜ.க. கோரிக்கை

காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிரந்தர வீடுகள் தர முன்னாள் துணை சபாநாயகர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிரந்தர வீடு வழங்க பா.ஜ.க. கோரிக்கை
X

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி வெள்ள பாதிப்பு கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் நிரந்தர வீடு வழங்க கோரினார்.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குமாரபாளையம் கரையோர வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து முன்னாள் துணை சபாநாயகரும், பா.ஜ.க. மாநில துணை தலைவருமான துரைசாமி ஆறுதல் கூறினார். பின்னர் மாவட்ட வெள்ள பாதிப்பு கண்காணிப்பாளரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண்மை இயக்குனருமான மகேஸ்வரன் ஆய்வு செய்ய ஐயப்பா மண்டபத்திற்கு வந்தார். அப்போது துரைசாமி, மகேஸ்வரனிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வாக மாற்று இடத்தில் வீடுகள் வழங்க கேட்டுக்கொண்டார்.

மகேஸ்வரனுடன் நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், நில அளவை தாசில்தார் சசிகலா, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் பங்கேற்றனர்

Updated On: 8 Aug 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?