/* */

இன்று முதல் பவானி - குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு : வாகன ஓட்டிகள் உற்சாகம்

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் இணைப்பு பாலம், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இன்று முதல் பவானி -  குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு :  வாகன ஓட்டிகள் உற்சாகம்
X

பவானி- குமாரபாளையம் இணைப்பு பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டதால், மக்கள் சென்று வருவதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் பவானியை இணைக்கும் முக்கிய பகுதியாக குமாரபாளையம் பவானி பாலம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு மாவட்ட எல்லைகள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன் காரணமாக, இப்பாலமானது கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டிருந்தன. இதனால், வாகன ஓட்டிகள் குமாரபாளையம் பகுதியில் இருந்து பவானி செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. பொது போக்குவரத்து திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, பவானி - குமாரபாளையம் பாலமானது மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் இருந்தே வாகனங்கள் அதிகளவில் பாலத்தை கடந்து செல்கின்றன.

Updated On: 5 July 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...