குமாரபாளையம் பகுதிகளில் பிரதோஷத்தால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்..!

பிரதோஷம் என்பதால் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டமில்லாமல் காணப்படும் இறைச்சிக்கடைகள்.
பிரதோஷத்தால் குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடின.
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகள் அதிகம் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நாளில் இங்கு இறைச்சி வாங்க குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டு இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். அதுவும் கூட்டம் அலைமோதுவதுடன் வரிசையில் நின்று இறைச்சி வாங்கிச் செல்வார்கள்.
இன்று பிரதோஷம் என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் பிரதோஷ வழிபாட்டிற்காக சிவன் கோவிலுக்கு செல்வதால், இறைச்சி கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. இதனால் இறைச்சி வியாபாரிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகினர்.
இது குறித்து இறைச்சி கடையினர் கூறியதாவது:
முன்பெல்லாம் ஊருக்குள் வேறு இறைச்சி கடைகள் இருக்காது. தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வந்துதான் இறைச்சி வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது அந்தந்த வார்டு பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இறைச்சி கடைகள் வந்துவிட்டன. அந்தந்த பகுதி மக்கள் அந்தந்த இடங்களில் இறைச்சி வாங்கிக் கொள்கிறார்கள்.
வாரத்தில் ஒரு நாள்தான் எங்களுக்கு வியாபாரம். அதுவும் ஞாயிறு அன்று அமாவாசை, பிரதோஷம் என வந்துவிட்டால், எங்க வியாபாரம் மந்த நிலை தான். அதிக இறைச்சி வாங்கி வைத்து காத்திருந்து ஏமாறும் நிலைதான் எங்களுக்கு.. இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் நேற்று பிரதோஷம் என்பதால் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடின. இந்த நிலை குமாரபாளையத்தில் மட்டுமல்ல பொதுவாகவே தமிழகம் முழுவதும் இந்த நிலை ஏற்பட்டிருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu