/* */

வங்கிகள் வேலை நேரம் குறைப்பு: வாடிக்கையாளர்கள் அவதி

வங்கிகள் வேலை நேரம் குறைப்பு: வாடிக்கையாளர்கள் அவதி
X

கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக வங்கிகளில் அதிக அளவு மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் வங்கிகள் செயல்படும் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மாதத்தின் தொடக்க வாரமாக இருப்பதால் ஏராளமான வயதான பெண்மணிகள் முதியவர்கள் தங்கள் ஓய்வூதிய பணத்தை எடுக்க வங்கிகளில் திரண்டனர். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்த காரணத்தினால் வங்கி ஊழியர்கள் இங்கே கூட்டம் கூட கூடாது எனவே நாளை வாருங்கள் என பலரையும் திருப்பி அனுப்பி வருவதால் முதியோர் பென்சன் வாங்க முடியாமல் முதியவர்களும் முதிய பெண்மணிகளும் வயதானவர்களும் திண்டாடி வருகின்றனர்.

வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை வங்கி உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதில் குறியாக இருப்பதாக முதியோர் பென்சன் வாங்க வந்த வயதான பெண்மணிகள் சிலர் நம்மிடம் கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முதியோர் உதவித்தொகை பென்சனை அவரவர் வீடு அருகில் உள்ள பொதுவான இடத்திலேயே கடந்த காலத்தில் தந்தது போல் தந்து உதவிட வேண்டுமென அரசுக்கு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 4 May 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?