/* */

பை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: தாலுகா அலுவலகத்தில் மனு

பவானி பகுதியில் உள்ள பை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி, மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: தாலுகா அலுவலகத்தில் மனு
X

பை தைக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு பெற்றுத்தரக்கோரி, பவானி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பவானியில் கட்டைப்பை, சுத்துப்பட்டி பை தைக்கும் தொழிலாளர்களுக்கு பை ஒன்றுக்கு ஒரு ரூபாய் கூலியும், சாதா பைக்கு 30 பைசா கூலியும், உயர்த்தி வழங்க வேண்டும் என, பவானி வட்டார கட்டைப்பை தைக்கும் தொழிலாளர்கள் சங்கம், இடது தொழிற்சங்க மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளர் சிவகாமி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் கோவிந்தராஜ், நிர்வாகிகள் சிங்காரவேல், நாச்சிமுத்து உள்ளிட்டார், பவானி தாலுகா அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:

கட்டைப்பை, சுத்துப்பட்டி பை தைக்கும் தொழிலாளர்களள், வீடுகளிலேயே தையல் இயந்திரங்கள் மூலம் கூலிக்கு பை தைத்து குடும்ப பொருளாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். இவர்களுக்கு 2016ம் வருடம் பை ஒன்றுக்கு 25 காசுகள் கூலி உயர்வு வழங்கப்பட்டது. 5 வருடமாக நரம்பு விலையேற்றம். தையல் மெசின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு, வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விளை உயர்வு உள்ளிட்ட பொதுவான விலை உயர்வு ஏற்பட்டது.

விலைவாசி உயர்வு காரணமாக வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனவே பை ஒன்றுக்கு ஒரு ரூபாயும், சாதா பை ஒன்றுக்கு 30 பைசாவும் கூலி உயர்வும் வழங்க வேண்டும். இது குறித்து பை உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!