குமாரபாளையம் அருகே நம்ம ஊரு சூப்பரு சார்பில் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, மரங்கள் பாதுகாப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படி குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, மரங்கள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு பேரணி ஊராட்சி அலுவலகத்தில் துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று எம்.ஜி.ஆர். நகர் பஸ் ஸ்டாப்பில் நிறைவு பெற்றது. ஊராட்சி தலைவி கவிதா வேலுமணி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ. கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் செந்தில் மற்றும் மகளிர் குழுவினர் பெருமளவில் பங்கேற்றனர். வழியில் உள்ள ஒவ்வொரு கடையிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu