/* */

குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையத்தில், பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை மற்றும்  குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில்,  நீர் மாசுபடுவது தடுத்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் நீர் மாசுபடுவது தடுத்தல் விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட மாசுக்கட்டுபாட்டு துறை உதவி பொறியாளர் கிருஷ்ணன், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, காந்திபுரம், ஆனங்கூர் சாலை, சேலம் சாலை, பெராந்தார் காடு, உள்ளிட்ட பல பகுதியின் வழியாக சென்ற பேரணி பள்ளியில் நிறைவுபெற்றது.

இப்பேரணியில், நீர்மாசுபடுவது குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறும் மாணவர்கள் பங்கேற்றனர். மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி அலுவலர்கள் கார்த்தி, லீலா வினோதன், பிரசாத், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 26 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு