/* */

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் ஓவியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் ஓவியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

குமாரபாளையத்தில், ஓவியர் சங்கம் சார்பில், சங்க தலைவர் கதிரவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், டிச. 11ல் பாரதி பிறந்த நாள் கொண்டாடுவது, இந்த நாளில் திரைப்பட நடிகரும், ஓவியருமான சாப்ளின் பாலு, நடிகர் பெஞ்சமின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஓவியர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தல், மரக்கன்று நடுதல், சங்க கொடிக்கம்பம் நடுதல், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தமிழ்நாடு தேர்தலில் நகர் புறங்களில் சுவர் விளம்பரம் எழுத அனுமதி வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தல், ஓவியர்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில அமைப்பு செயலர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலர் செந்தில்குமார் பங்கேற்று, உறுப்பினர் அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கினார். இது சம்பந்தமாக நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது. நிர்வாகிகள் சிங்காரவேல், பாஸ்கரன், சிவகுமார், சீனிவாசன், பிரகாஷ், குணசேகரன், சுசிகுமார், ரவிச்சந்திரன், மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 24 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...