இரும்பு பைப்பால் தாக்கிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது
குமாரபாளையத்தில் இரும்பு பைப்பால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
குமாரபாளையம் சத்யா நகரில் வசிப்பவர் முருகன்( 22.) கூலித்தொழிலாளி. இவரும் மனோஜ்,( 24,) இருவரும் நண்பர்கள். இதில். மனோஜ் என்பவருக்கும், அவருடன் கூலி வேலை செய்த சரவணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முருகன் வீட்டிற்கு வந்த சரவணன், ரஞ்சித் மற்றும் அடையாளம் தெரியாத இரு நபர்கள், மனோஜ் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு தெரியாது எனக்கூறிய முருகனை நான்கு பேரும் கையாலும், இரும்பு பைப்பாலும் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முருகன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி சரவணன்( 25,) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu