Begin typing your search above and press return to search.
குமாரபாளையம பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு
குமாரபாளையம் பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் பஸ் நிலைய பொதுக்கழிப்பிடம் பகலில் கூட பூட்டி வைக்கும் நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன், பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்விற்கு பின்னர் சேர்மன் விஜய்கண்ணன் கூறும்போது
பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் அதற்கென்று தனியாக போர்வெல் இல்லாமல் இருந்து வந்துள்ளது. அருகில் இருக்கும் பைப் லைன் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. இங்கு தனியாக போர்வெல் அமைப்பது அவசியம் என்பதால், இங்கு புதிய போர்வெல் அமைத்து, தண்ணீர் வசதி எப்போதும் கிடைத்திடும் படி செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.