குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ வழங்கிய 15-வது வார்டு தி.மு.க.
![குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ வழங்கிய 15-வது வார்டு தி.மு.க. குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ வழங்கிய 15-வது வார்டு தி.மு.க.](https://www.nativenews.in/h-upload/2022/03/17/1499178-17nmksiv04.webp)
X
குமாரபாளையம் 15வது வார்டு தி.மு.க. சார்பில் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ வழங்கப்பட்டது.
By - K.S.Balakumaran, Reporter |17 March 2022 9:00 PM IST
குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு 15வது வார்டு தி.மு.க. சார்பில் பீரோ வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 15வது வார்டு தி.மு.க. சார்பில், வார்டு பொறுப்பாளர் ரங்கநாதன் ஏற்பாட்டின் பேரில் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். அங்கன்வாடி மைய பொறுப்பாளர்களிடம் பீரோ ஒப்படைக்கப்பட்டது.
இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் சத்தியசீலன், பரிமளம், ரங்கநாதன், புஷ்பா, அம்பிகா, நிர்வாகி அய்யப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu