குமாரபாளையத்தில் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் அன்புமணி ராமதாஸ்  பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

குமாரபாளையத்தில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாடாளுமன்ற மேலவை எம்.பி.யும், பா.ம.க. மாநில தலைவருமான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா, குமாரபாளையம் பா.ம.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

பா.ம.க. எம்.பி.யும், பா.ம.க. மாநில தலைவருமான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா நேற்று அவரது கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பா.ம.க. சார்பில் நகர செயலாளர்கள் கோவிந்தன், செந்தில் தலைமையில் சேலம் சாலை முனியப்பன் கோவிலில் கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. நகரில் பல வார்டுகளில் கட்சிக்கொடியேற்றிவைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கள்ள மது ஒழிக்க கோரி போலீசில் மனு

திருப்பூர் மாவட்டத்தில் மதுவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கொலை செய்தது போல், குமாரபாளையத்தில் நடக்காதிருக்க, கள்ள மது விற்பனை தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. சார்பில், இன்ஸ்பெக்டர் தவமணியிடம் நகர செயலாளர் கோவிந்தன் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்தார். மாவட்ட துணை தலைவர் சவுந்திரராஜன், முன்னாள் மகர செயலர் சோமு, முன்னாள் ஒன்றிய செயலர் ரவிக்குமார், நகர அமைப்பு செயலாளர் மாதையன், தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கராஜ், கந்தசாமி, முன்னாள் நகர தலைவர் கார்த்தி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story