அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக தேர்வு

மல்யுத்த பயிற்சியாளர் இளங்கோவன்
அகில இந்திய மல்யுத்த போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
72வது அகில இந்திய மல்யுத்த போட்டி அக். 9 வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடுவராக பணியாற்ற குமாரபாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு மல்யுத்த சங்க பொது செயலாளர் இளங்கோவன் தேர்வாகியுள்ளார். இவரை நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினர்.
தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் குமாரபாளையம் வீரர் சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் 10வது தேசிய அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு வயது மற்றும் எடை பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. பாரம்பரிய மல்யுத்த சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் தமிழக அணி பங்கேற்றது.
இதில் 70 கிலோ எடைப்பிரிவில் குமாரபாளையத்தை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் சக்திவேல் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார். இவரை குமாரபாளையம் முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்தினார்கள். அடுத்து உலக அளவிலான போட்டி மெக்சிகோ நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சக்திவேல் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu