/* */

புதிய மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் அகற்ற கோரிக்கை

குமாரபாளையத்தில் புதிய மின் கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

HIGHLIGHTS

புதிய மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள்   அகற்ற கோரிக்கை
X

குமாரபாளையம் சேலம் சாலையில் புதிய உயர் மின் கம்பங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பர தட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தில் புதிய மின் கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி கூறியதாவது:

சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் கம்பங்கள் டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு ஒரு கம்பத்திற்கு 2 எல்.இ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.இ.டி. விளக்கும் ஆக 129 விளக்குகள் புதிதாக அமைக்கும் பணி, நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இவைகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த உயர் மின் கம்பங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் தீபாவளி வியாபார விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடக்கத்திலேயே அகற்றாவிட்டால் விபத்து ஏற்பட்டு பலரும் பாதிக்கபடும் நிலை ஏற்படும். எனவே, உடனே இது போன்ற அனுமதி இல்லமால் மின் கம்பங்களில் பேனர் கட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பேனர்கள் அகற்றப்படவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 2 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை