/* */

குமாரபாளையத்தில் அ.தி.மு.க தேர்தல் பணிமனை திறப்பு விழா

குமாரபாளையத்தில் அ.தி.மு.க தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அ.தி.மு.க தேர்தல் பணிமனை திறப்பு விழா
X

குமாரபாளையம் நடராஜா நகரில் நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் பணிமனையை, குமாரபாளையம் எம்.எல்.ஏ. தங்கமணியின் மகன் தரணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதையொட்டி, அந்தந்த பகுதி வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் பணிமனைகளை துவக்கி வருகிறார்கள். நடராஜா நகரில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு விழாவானது, நகர செயலாளரும், வேட்பாளருமான நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் எம்.எல்.ஏ.வுமான தங்கமணியின் மகன் தரணி பங்கேற்று பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் தரணி பேசியதாவது: குமாரபாளையம் தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்பதை நீங்கள் பலமுறை நிருபித்திருக்கிறீர்கள். இந்த முறை அ.தி.மு.க. சார்பில் நகர மன்றத் தலைவர் வருவது உறுதி. அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் அயராது பாடுபட்டு, தொகுதியில் வெற்றியை பெற்று தந்தது போல், நகராட்சி நகரமன்ற தலைவர் பதவியையும் பெற்று தர பாடுபட வேண்டும் என்றார். வேட்பாளர் புருஷோத்தமன், நிர்வாகிகள் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 6 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!