சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சுற்றுப்புற பகுதிகள் மாசடைவதை தடுக்க வேண்டும் என சி.ஐ.டியூ. சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சுற்றுப்புற பகுதிகள் மாசடைவதை தடுக்க வேண்டும் என சி.ஐ.டியூ. சார்பில் போலீசில் புகார் கொடுத்துள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சுற்றுப்புற பகுதிகள் மாசடைவதை தடுக்க வேண்டும் என சி.ஐ.டியூ. சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. எஸ்.பி.பி. காகித ஆலை, பொன்னி சர்க்கரை ஆலை ஆகிய உள்ளன. சாயப்பட்டறைகளில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாததால், காவேரி ஆற்று நீர் மாசடைந்துள்ளது. சாயப்பட்டறை பாய்லர்களிலிருந்து வெளியேறும் கரித்துகள்கள் பெரும் மாசு ஏற்படுத்தி வருகிறது.

காகித ஆலை, சர்க்கரை ஆலைகளில் வெளியேறும் கரித் தூள், பக்காஸ் துகள்கள், சுண்ணாம்பு துகள்கள் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விவசாய நிலங்களில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி கொடுக்க கூடாது. அனைத்து சாயப்பட்டறையினர் மாசுக்கட்டுப்பாட்டுதுறையினர் பின்பற்ற சொல்லும் வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். ஒலி மாசு ஏற்படுவதையும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவினை நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி உள்பட பலர் கொடுத்தனர்.

Tags

Next Story