குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

X
By - K.S.Balakumaran, Reporter |9 March 2022 9:30 AM
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் முருகேஷ், 55, கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில் ஐயப்பன் கோவில் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலையை கடந்து கழிப்பிடம் சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முருகேஷ் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu