ஆடி வெள்ளியில்திறக்கப்படாத அறநிலையத்துறை கோவில்: பக்தர்கள் அவதி

ஆடி வெள்ளியில்திறக்கப்படாத அறநிலையத்துறை கோவில்: பக்தர்கள் அவதி
X

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மாலை 5 மணிக்கும் திறக்கப்படாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

குமாரபாளையம் ஆடி வெள்ளியில் மாலை 5 மணிக்கும் அறநிலையத்துறை கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

அம்மன் கோவில்களில் பொதுவாக செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி, உள்பட விஷேச நாட்களில் கூட்டம் அதிகம் வருவது வழக்கம். நேற்று ஆடி வெள்ளி என்பதால் காளியம்மன் கோவிலில் மாலை 5 மணிக்கும் திறக்கப்படாத நிலை இருந்தது.

பக்தர்கள் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அறநிலையத்துறைகுட்பட்ட கோவிலில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு கோவில் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture