குமாரபாளையத்தில் பிரதான சாலைக்கு வந்த வார சந்தையால் போக்குவரத்து நெரிசல்

குமாரபாளையத்தில் பிரதான சாலைக்கு வந்த வார சந்தையால்   போக்குவரத்து நெரிசல்
X

குமாரபாளையத்தில் வாரச்சந்தை பிரதான சாலைக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் வாரச்சந்தை பிரதான சாலைக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் வாரச்சந்தை பிரதான சாலைக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

குமாரபாளையம் வாரச்சந்தை சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்தது. அந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், எடப்பாடி பிரதான சாலையில் இருபுறமும் சந்தைக்கு வந்த அனைத்து கடைகளும் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே குறுகிய சாலையாக இருந்த நிலையில், தற்போது இந்த கடைகளும் போடப்பட்டு உள்ளதால், அவ்வழியே வரும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மிக முக்கியமான சாலை என்பதால், ஏராளமான டூவீலர்கள் வந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் எனவும், வாரச்சந்தை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கவும் வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
why is ai important to the future